தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போனி கபூர் வீட்டில் மேலும் இரு பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் மேலும் இரு பணியாளர்களுகு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
மகள் ஜான்வியுடன் போனி கபூர்
Updated On :22 மே 2020, 11:08 am

DIN

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் மேலும் இரு பணியாளர்களுகு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் வலிமை ஆகிய படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக உள்ளார்.

போனி கபூர் வீட்டின் பணியாளரான 23 வயது சரண் சாகுவுக்கு சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மும்பை அந்தேரியில் உள்ள போனி கபூரின் வீட்டிலேயே அவர் வசித்து வந்தார். மே 16 அன்று உடல்நலக் குறைவுடன் சரண் இருந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ள உதவியுள்ளார் போனி கபூர். பிறகு அவர் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். பிறகு, பரிசோதனையின் முடிவில் சரணுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து சரண் சிகிச்சை பெற்று, தனிமைப்படுத்திகொள்வதற்கான ஏற்பாடுகளை மும்பை மாநகராட்சி செய்துள்ளது.

இதுகுறித்து போனி கபூர் கூறியதாவது: நானும் எனது மகள்களும் அலுவலக ஊழியர்களும் நலமுடன் உள்ளோம். யாருக்கும் எவ்வித கரோனா அறிகுறிகளும் கிடையாது. ஊரடங்கு ஆரம்பித்த பிறகு நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. எனினும் எங்களைத் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். தகவல் தெரிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த மும்பை மாநகராட்சிக்கு நன்றி. விரைவில் குணமடைந்து சரண் எங்களுடைய வீட்டுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

சரண் சாகுவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானவுடன் போனி கபூர் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள், அலுவலக ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், போனி கபூர் வீட்டில் மேலும் இரு பணியாளர்களுகு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் போனி கபூர் மற்றும் அவருடைய இரு மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின்றி நலமுடன் உள்ளதாக அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.