பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார் பாடகர் வேல்முருகன்

இந்தமுறை பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாள்களைத் தாண்டிச் செல்லுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார் பாடகர் வேல்முருகன்

பிக் பாஸ் போட்டியிலிருந்து ரேகாவுக்கு அடுத்ததாக பாடகர் வேல்முருகன் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. 

முதல் நாளில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாக புதிய போட்டியாளர்களாக நுழைந்துள்ளார்கள். 

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் முதலில் வெளியேறியவர் மூத்த நடிகை ரேகா. அடுத்த வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்ற பாடகர் ஆஜீத், ஏற்கெனவே ஒரு போட்டியில் வென்று எவிக்சன் பாஸ் என்கிற பரிசை அவர் பெற்றிருந்ததால் அதைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாடகர் வேல்முருகன் 2-வது போட்டியாளராக வெளியேறியுள்ளார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றன. எனினும் புதிய இரு போட்டியாளர்களால் பிக் பாஸ் இல்லத்துக்குள் தற்போதும் 16 போட்டியாளர்கள் நிறைந்துள்ளார்கள். இதனால் இந்தமுறை பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாள்களைத் தாண்டிச் செல்லுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com