சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

படம் முழுக்க சிரிக்காமல் நடித்தது புதிய அனுபவம்: சூரரைப் போற்று பற்றி சூர்யா

இந்தப் படத்தில் என்னையே வித்தியாசமாகப் பார்த்தேன். படம் முழுக்கச் சிரிக்காமல் நடித்ததே...

News image
Updated On :2 நவம்பர் 2020, 10:32 am

DIN

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

சூரரைப் போற்று படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30 அன்று வெளியாவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. விமானம் தொடர்பான கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்து அனுமதி வாங்கிய பிறகுதான் படத்தை ஓடிடியில் வெளியிடமுடியும். இதனால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதாக சூர்யா தெரிவித்தார். 

தற்போது, சூரரைப் போற்று படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. தீபாவளிக்கு இரு நாள்களுக்கு முன்பு நவம்பர் 12 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ளது. 

இப்படம் பற்றி சூர்யா கூறியதாவது:

நான் பிரமாதமான நடிகன் கிடையாது. கேமரா முன்னால் உடனடியாக என்னால் நடிக்க முடியாது. படப்பிடிப்புக்கு முன்பே அனைத்து விஷயங்களையும் பேசி முடிவு செய்துவிட்டோம். எல்லாக் காட்சிகளும் ஓரிரு டேக்கில் ஓகே ஆகிவிடும். படத்தில் 96 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒரு வசனமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பவரை அலுவலகத்துக்கு வரவைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் இயக்குநர் சுதா. 

இந்தியாவின் முகத்தை மாற்றியவர்களில் கோபிநாத்தும் ஒருவர். விமானப் போக்குவரத்தைத் துறையை அப்படியே மாற்றினார். அவருடைய கதையைக் கொண்டு சுவாரசியமான திரைக்கதையை எழுதியுள்ளார் சுதா.

சில படப்பிடிப்புகளில் தான் நமக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். நந்தா, பிதாமகன், மெளனம் பேசியதே, காக்க காக்க போன்ற சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியிருக்கிறது. முந்தைய படத்தில் செய்ததை இந்தப் படத்தில் செய்ய வேண்டாம் என்றார் சுதா. இந்தப் படத்தில் என்னையே வித்தியாசமாகப் பார்த்தேன். படம் முழுக்கச் சிரிக்காமல் நடித்ததே பெரிய சவாலாக இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.