சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: ஆமிர் கான் மகள் அதிர்ச்சித் தகவல்

அதிலிருந்து நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதைப் பற்றி பேசவில்லை. 

News image
படம் - instagram.com/khan.ira/
Updated On :3 நவம்பர் 2020, 7:20 am

DIN

14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக பிரபல நடிகர் ஆமிர் கானின் மகள் அதிர்ச்சித் தகவல் அளித்துள்ளார்.

பிரபல நடிகர் ஆமிர் கான் 1986-ல் ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜூனைத், ஐரா என இரு குழந்தைகள். பிறகு இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். 2005-ல் கிரண் ராவைத் திருமணம் செய்துகொண்டார் ஆமிர் கான். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.

இந்நிலையில் அமீர் கானின் மகளான ஐரா கான், இளம் வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து இன்ஸ்டகிராமில் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

என்னுடைய 14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். அந்தச் சூழல் வித்தியாசமாக இருந்தது. அந்த நபர் தெரிந்து தான் அதைச் செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. அது தினமும் நடக்கவில்லை. என்ன நடந்தது என்று புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது. என் பெற்றோர் அந்தச் சூழலில் இருந்து என்னை மீட்டார்கள். அதிலிருந்து வெளியே வந்த பிறகு அதைப் பற்றி நான் மோசமாக உணரவில்லை, அச்சம் கொள்ளவில்லை. அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை. முடிந்துவிட்டது என்று அதிலிருந்து நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதைப் பற்றி பேசவில்லை. 

என் சிறு வயதில் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டார்கள். இதனால் நான் அதிர்ச்சிக்கு ஆளாகவில்லை. சுமூகமான முறையில் விவாகரத்து நடைபெற்றது. அவர்களும் இன்னும் நண்பர்களாக உள்ளார்கள். எங்கள் குடும்பம் உடைந்துவில்லை என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.