ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

இசைக்கலைஞர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் பங்கேற்கும் கமல், ரஹ்மான்

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்களுக்கு உதவுவதற்காக...

News image
Updated On :11 செப்டம்பர் 2020, 11:59 am

DIN

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்களுக்கு உதவுவதற்காக நடத்தப்படும் ஒரு குரலாய் என்கிற இணைய இசை நிகழ்ச்சியில் கமல் ஹாசன், ரஹ்மான் பங்கேற்கிறார்கள்.

கரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் இசைக்கலைஞர்களுக்கு உதவுவதற்காக யுனைடெட் சிங்கர்ஸ் அறக்கட்டளை சார்பில் ஒரு குரலாய் என்கிற இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. செப்டம்பர் 12 அன்று இந்திய நேரம் மாலை 6 மணிக்கு ஃபேஸ்புக், யூடியூப் சமூகவலைத்தளங்கள் வழியாக இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. பாடகர்கள் ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பின்னணிப் பாடகர்கள் கலந்துகொள்கிறார்கள். நடிகர் கமல் ஹாசனும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அனைவரும் தமிழ்ப் பாடல்களைப் பாடவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் விருப்பப்பட்டால் நன்கொடை அளிக்கலாம். 

யுனைடெட் சிங்கர்ஸ் என்கிற அமைப்பு பாடகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் நிதி திரட்டி கடினமான சூழல்களில் அவதிப்படும் பாடகர்களுக்கு உதவுவதற்காக இந்த அமைப்பை மற்ற பாடகர்களின் துணையுடன் தொடங்கியுள்ளார் பாடகர் ஸ்ரீனிவாஸ். ஒரு குரலாய் நிகழ்ச்சி பற்றி அவர் கூறியதாவது:

கோயில், திருமண நிகழ்ச்சிகளில் பாடும், பங்கேற்கும் இசைக்கலைஞர்கள் பலரும் கரோனா ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு இசைக்கலைஞர், காய்கறி விற்கவும் தயாராக உள்ளதாகக் கூறுகிறார். இதனால் தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

இந்நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி, கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த கலைஞர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.