உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக் கொண்டிருக்கும் படம் ஞானச்செருக்கு. மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராஜேந்திரன். யாரிடமும் உதவி இயக்குனராய் பணி புரியாமல், திரைக்கலையைத் தானாகவே கற்றுக் கொண்டு, சுயாதீனப் படமாக ஞானச்செருக்கை உருவாக்கியுள்ளார் தரணி ராஜேந்திரன்.
நான்கு வருடக் கடும் உழைப்பில் இந்தப் படத்தை உருவாக்கியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இத்திரைப்படம் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை 7 சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது, மேலும் 19 விருதிற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இயக்குநர் பா.ரஞ்சித் ஞானச்செருக்கு படத்தின் முதல் பார்வையை அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
இந்தப் படத்தைப் பற்றி ரஞ்சித் கூறுகையில், ‘இன்றைய தமிழ்ச் சூழலில் ஞானச்செருக்கு மிகவும் முக்கியமான படைப்பாக அமையும். தோழர் தங்கள் வட்டத்தில் பகிருங்கள்.குழுவிற்கு துணை நில்லுங்கள்.நன்றி. என்றார்’