திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

காங்கிரஸ் எம்.எல்.ஏ மகனை மணக்க உள்ள தனுஷ் நாயகி

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் மகனை தனுஷ் திரைப்பட நாயகி மணம் புரிய உள்ள செய்தி வெளியாகியுள்ளது.

News image

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் மகனை தனுஷ் திரைப்பட நாயகி மணம் புரிய உள்ள செய்தி வெளியாகியுள்ளது.

Updated On :14 பிப்ரவரி 2021, 8:54 pm IST

சென்னை: காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் மகனை தனுஷ் திரைப்பட நாயகி மணம் புரிய உள்ள செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாதா. பின்னர் விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா', தனுஷ் நடித்த 'பட்டாஸ்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் மகனை மெஹ்ரீன் பிர்சாதா மணம் புரிய உள்ள செய்தி வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மூன்று முறை ஹரியாணா மாநில முதல்வராக இருந்தவர் பஜன் லால். இவரது மகன் குல்தீப் பிஷ்னோய் ஹரியாணா மாநிலத்தின் அதம்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருக்கிறார். இவரது மகன் பாவ்யா பிஷ்னோய் உடன்தான் மெஹ்ரீனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பாவ்யா பிஷ்னோய்யும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

மெஹ்ரீன் - பாவ்யா பிஷ்னோய் தம்பதியினரின் திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 12-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.