கர்ணன் திரைப்படத்தின் ''கண்டா வரச்சொல்லுங்க...'' எனும் முதல் பாடல் நேற்று இரவு 8 மணிக்கு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் - நடிகர் தனுஷ் கூட்டணியில் கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திரைப்படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையினை அமைத்துள்ளார்.
திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி ரீலீசாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் நேற்று இரவு 8 மணிக்கு வெளியானது.
கண்டா வரச்சொல்லுங்க... என்று தொடங்கும் பாடல் கிராமிய மணத்துடன் பின்னணியில் தப்பு, தாரை முழங்க கிடக்குழி மாரியம்மாள் உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் வரிகளில் உருவாகியுள்ள பாடல் உணர்வுப்பூர்வமாக உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.