தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சசிகுமார் நடிக்கும் முந்தானை முடிச்சு ரீமேக்: இயக்குநர் அறிவிப்பு!

ஏ.வி.எம். தயாரிப்பில் கே. பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் - முந்தானை முடிச்சு...

Published On :

ஏ.வி.எம். தயாரிப்பில் கே. பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் - முந்தானை முடிச்சு. 1983-ல் வெளியான இந்தப் படம் தமிழகமெங்கும் ஏராளமான திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்து ஓடி, வசூலில் சாதனை படைத்தது. பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. கே. பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் உருவான இந்தப் படத்துக்கு இசை - இளையராஜா.

தற்போது முந்தானை முடிச்சு படம் ரீமேக் செய்யப்படுகிறது.

சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஊர்வசி ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

பாக்யராஜின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி வேடத்தில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கை எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வைச்ச சிங்கமடா ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.