பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் நடிகர் விஷால்.
தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகராக உள்ள விஷால், தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தயாரிப்புக்காகப் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியிடம் கடன் வாங்கியுள்ளார் விஷால். தன் வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில பத்திரங்களை ஆவணங்களாக அளித்து சில லட்சங்களைக் கடனாகப் பெற்றுள்ளார். பிறகு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாக ஆர்.பி. செளத்ரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர் விஷால்.
சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் விஷால் சார்பாக அவருடைய மேலாளர் ஹரி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்