விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
விஷால் நடிப்பில் கடைசியாக சக்ரா படம் வெளிவந்தது. துப்பறிவாளன், எனிமி, விஷால் 31 என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
கரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழ்நாட்டில் திரையரங்குகள் இயங்கவும் திரைப்படப் படப்பிடிப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் விஷால் 31 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுபற்றி ட்விட்டரில் விஷால் கூறியதாவது:
விஷால் 31 படப்பிடிப்பை ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளோம். நீண்ட நாள் படப்பிடிப்பு நடைபெறும். ஜூலை இறுதியில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மீண்டும் பணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி என்று கூறி விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
விஷால் 31 படத்தை து.ப. சரவணன் இயக்குகிறார். டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக நடிக்கிறார். இசை - யுவன் சங்கர் ராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


