கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகை ராதிகா ஆப்தே
பிரபல நடிகை ராதிகா ஆப்தே, கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.


பிரபல நடிகை ராதிகா ஆப்தே, கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் இப்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின், சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்ட், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் பிரபல நடிகை ராதிகா ஆப்தே, கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். இதுகுறித்த தகவலை இன்ஸ்டகிராமில் அவர் பதிவு செய்துள்ளார்.
தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...