தனது தந்தையும் நடிகருமான அருண் பாண்டியன் நலமாக உள்ளதாக நடிகை கீர்த்தி பாண்டியன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் நடித்த அன்பிற்கினியாள் படம் சமீபத்தில் வெளியானது.
சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அருண் பாண்டியன் அதிலிருந்து மீண்ட பிறகு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதுபற்றி நடிகை கீர்த்தி பாண்டியன் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் தந்தையுடனான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன், மேலும் கூறியதாவது:
அப்பா நலமாக, திடமாக உள்ளார். தனக்குப் பிடித்த விவசாயத்தில் மீண்டும் ஈடுபடுகிறார். அன்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.