நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிசாசு - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

News image

பிசாசு-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Updated On :1 செப்டம்பர் 2021, 3:41 pm IST

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு  வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று பிசாசு-2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின் 2020 டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கினார். நாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்க கார்த்திக் ராஜா இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் . பெரிதும் எதிர்பார்க்கப்படும்  இப்படத்தில் அண்ட்ரியாவுடன்  பூர்ணா , ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் சேதுபதி கவுரவ தோற்றதில் ஒரு காட்சியில் வருகிறார்.

முன்னதாக பிசாசு-2 திரைப்படத்தின் முதல்பார்வை கடந்த ஆக-3 ஆம் தேதி  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.