நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக தயாராகி வரும் ' புஷ்பா ' திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் .
சட்டவிரோதமாக வனத்தில் சந்தன மரங்களையும் , செம்மரங்களையும் வெட்டி லாரியில் எடுத்துச் செல்லும் கடத்தல்காரனின் வாழ்வைச் சொல்லும் திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | ஆபாச பட விவகாரம்: நடிகை ஷில்பா ஷெட்டியின் கருத்துக்கு மாதவன் பதில்
பெரிய பொருட்செலவில் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா, வில்லனாக பகத் பாசிலும் , முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு (2022) வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.