விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணையும் தனுஷ் - அனிருத்: கைகோர்க்கும் பிரபல இயக்குநர்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணையும் படத்தில் பிரபல இயக்குநரான பாரதிராஜா நடிக்கவுள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :4 ஆகஸ்ட் 2021, 11:58 am IST

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணையும் படத்தில் பிரபல இயக்குநரான பாரதிராஜா நடிக்கவுள்ளார். 

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கர்ணன்',' ஜகமே தந்திரம்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாறன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு தனுஷ், கதை, திரைக்கதை, வசனம் எழுத, மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் இணையவிருக்கின்றனர். இந்தப் படத்தில் புதிதாக பாரதிராஜா இணைந்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.