மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

'கட்டணத்தைக் குறையுங்கள்' - புதுச்சேரி முதல்வரிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை

புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்குமாறு அம்மாநில முதல்வரிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்தார். 

Published On :

புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்குமாறு அம்மாநில முதல்வரிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்தார். 

'மாஸ்டர்' படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, தற்போது கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 

புகைப்படங்கள்: 

இதில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியைச் சந்தித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கு கட்டணமாக முதலில் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.28 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். 

டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இதனால் சிறிய முதலீட்டில் தயாராகும் படங்கள் பாதிக்கப்படும் என்பதால் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.