உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

'மாநகரம்' ஹிந்தி ரீமேக்: டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஜய் சேதுபதி

மாநகரம் ஹிந்தி ரீமேக்கான மும்பைகர் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி நிறைவு செய்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:05 am IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காகிறது. ஹிந்தியில் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். 'மும்பைகர்' என்று பெயிரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ராந்த் மாஸ்ஸே, ஹிர்து ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Story image

இந்தப் படத்தில் தமிழில் முனிஷ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி இன்று நிறைவு செய்துள்ளார். இதனையடுத்து விஜய் சேதுபதியுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஃபேமிலிமேன் இயக்குநர்களின் புதிய இணையத் தொடரிலும் நடித்து வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.