நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

''திரையுலகுக்கு பேரிழப்பு'': பாடலாசிரியரின் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

பிரபல பாடலாசிரியரின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 டிசம்பர் 2021, 4:51 pm IST


தெலுங்கு திரையுலகில் முன்னணி பாடலாசிரியரான சீத்தாராமா சாஸ்த்ரி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தெலுங்கு திரைப்படங்களல் அவர் ஏறக்குறைய 3,000 பாடல்களை எழுதியுள்ளார். ஆந்திர அரசின் 11 நந்தி விருதுகளையும், 4 ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். திரையுலகில் இவர் செய்த சாதனைகளுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.  

Story image

பாடலாசிரியர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தெலுங்கு மொழியின் தேன் சொட்டும் பாடலாசிரியர். 3000 பாடல்கள் எழுதிய முன்னோடி, ஸ்ரீவெண்ணிலா சீதாராம சாஸ்த்ரி காலமானார் என்ற செய்தி கண்ணாடியில் கல் விழுந்தது போல் என் உள்ளத்தை உடைக்கிறது. 

ஒரு கவிதை நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது. என் தமிழ்க் கண்ணீரைத் தெலுங்கு உலகின் மீது தெளிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Story image

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''திரையுலகுக்கு பேரிழப்பு. உங்கள் பணி எப்பொழுதும் எங்களால் நினைவுகொள்ளப்படும்'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.