‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சிம்புவின் 'கொரோனா குமார்' படத்துக்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சிம்புவி்ன் கொரோனா குமார் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனையடுத்து கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' என்ற படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். 

இந்தப் படம் கோகுல் இயக்கிய 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தைப் போல நகைச்சுவை படமாக உருவாக விருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு 'மாநகரம்' பட இசையமைப்பாளர் ஜாவித் ரியாஷ் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் போட்டியின் போது இந்தப் படத்தின் சார்பாக வெளியிடப்பட்ட சிஎஸ்கே சிங்கங்களா என்ற பாடலுக்கும் ஜாவித் ரியாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு முடிந்தததும் சிம்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.