சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமன் குமார் சின்ராசு என்ற வேடத்தில் நடிக்க அவரது தங்கை துளசியாக ஸ்வேதா நடித்து வந்தரா.
இந்த நிலையில் ஸ்வேதா திடீரென வானத்தை போல தொடரை விட்டு விலகினார். ஆனால் அவர் விலகியதற்கான காரணம் தெரியவில்லை.
இதனையடுத்து ஸ்வேதாவிற்கு பதிலாக துளசி என்ற வேடத்தில் மான்யா ஆனந்த் நடிக்கவிருக்கிறார். இந்த மான்யா ஆனந்த் தெலுங்கில் வெற்றிபெற்ற பாக்யரேகா என்ற தொடரில் நடித்திருந்தார். மான்யா நடித்துள்ள காட்சிகள் நாளை (16/12/2021) முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.