மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஜனவரியில் வலிமையுடன் இயக்குநர் வினோத்தின் மற்றொரு படமும் வெளியாகிறது!

ஜனவரியில் வலிமையுடன் இயக்குநர் வினோத்தின் மற்றொரு படமும் வெளியாகிறது 

News image
Updated On :30 டிசம்பர் 2021, 7:33 pm IST

இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்த சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினோத். சதுரங்க வேட்டை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை வினோத் இயக்கினார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை மூலம் அஜித்துடன் இணைந்தார்.  

அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தற்போது அஜித்துடன் அவர் இணைந்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. மூன்றாவது முறையாக அஜித்துடன் ஒரு படத்தில் வினோத் இணையவுள்ளார். 

Story image

இந்த நிலையில் சதுரங்க வேட்டை படத்தின் 2 ஆம் பாகத்துக்கு கதை மற்றும் திரைக்கதையை வினோத் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, திரிஷா இணைந்து நடித்துள்ளனர். சலீம் பட இயக்குநர் நிர்மல் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

பொருளாதார சிக்கல் காரணமாக இந்தப் படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.