பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள்.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள். இதன் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.