தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

விஜய், தனுஷ் வரிசையில் 3வது இடத்தில் சிவகார்த்திகேயன் : வெளியான தகவல்

நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது. 

Published On :

நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது. 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப்
பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் முதல் நாளில்
ரூ.7.36 கோடி வசூலும், இரண்டாம் நாளில் ரூ.8.05 கோடி வசூலும் பெற்றது. 

முதல் இரண்டு நாள் வசூலைப் பொறுத்தவரை இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களில் டாக்டர் திரைப்படம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக
கூறப்படுகிறது. முதல் இரு இடங்களில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் கர்ணன் படமும் உள்ளன. இந்த வாரம் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் இந்த வாரமும் டாக்டர் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.