மறைந்த நடிகர் விவேக்கிற்கு அளித்த வாக்குறுதியை ஆர்யா நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நடிகர் விவேக் தனது நகைச்சுவை காட்சிகளின் மூலம் சமூக கருத்துக்களை தெரிவித்து வந்தார். மேலும் தொடர்ந்து மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 15) அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் முன்னிலையில் மரங்கள் நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்துல் கலாமின் பிறந்த நாளின் முன்னிட்டு நடிகர் விவேக் தன்னுடன் இணைந்து மரங்கள் நட என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் அவருக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். எதிர்பாராத விதமாக இன்று அவர் நம்மிடம் இல்லை. எனவே அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இங்கு வந்துள்ளேன் என்றார்.
நடிகர் விவேக் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்த அரண்மனை 3 நேற்று(அக்டோபர் 14) வெளியாகியிருந்தது. நடிகர் விவேக்கின் கடைசி படமாக இந்தப் படம் அமைந்தது. இந்தப் படத்தில் நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சிகளுக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


