நீண்ட இடைவேளைக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம்:  கதாநாயகன் யார் தெரியுமா ?

நீண்ட இடைவேளைக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம்: கதாநாயகன் யார் தெரியுமா ?

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
Published on

லிங்கா படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. கன்னடத்தில் சுதீப் நடித்திருந்த கோடிகொப்பா, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்திருந்த ஜெய் சிம்ஹா, ரூலர் ஆகிய படங்களை இயக்கினார். 

தற்போது கே.எஸ்.ரவிக்குமார் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' என்ற மலையளப் படத்தின் தமிழில் பதிப்பான 'கூகுள் குட்டப்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. 

மற்ற கே.எஸ்.ரவிக்குமார் படங்களைப் போல பாசம், நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் என கலந்துகட்டி உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com