அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

நடிகர் சித்தார்த்திற்கு லண்டனில் அறுவைச் சிகிச்சை: இயக்குநர் தகவல்

அறுவைச் சிகிச்சைக்காக நடிகர் சித்தார்த் லண்டன் சென்றுள்ளதாக மகா சமுத்திரம் திரைப்பட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News image

நடிகர் சித்தார்த்திற்கு லண்டனில் அறுவைச் சிகிச்சை: இயக்குநர் தகவல்

Updated On :27 செப்டம்பர் 2021, 9:12 pm IST

அறுவைச் சிகிச்சைக்காக நடிகர் சித்தார்த் லண்டன் சென்றுள்ளதாக மகா சமுத்திரம் திரைப்பட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிப் படங்களை கொடுத்ததன் மூலம் பிரபலமானவர் கதாநாயகன் சித்தார்த்.

ஆரம்பகாலகட்டத்தில் உதவி இயக்குநராக இருந்த அவர், தமிழில் பாய்ஸ் திரைப்படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து தெலுங்கு உள்பட ஜிகர்தண்டா, அருவம், அவள் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றார். 

அவர் தற்போது மகாசமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அஜய் பூபதி இயக்கியுள்ளார். 

இந்த திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா ஹைதாராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த் கலந்துகொள்ளவில்லை.

நடிகர் சித்தார்த் அறுவைச் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும், அதனால் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் இயக்குநர் விளக்கம் அளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.