தொடர்ந்து பொன்னியின் செல்வன் நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் விக்ரம் - காரணம் இதுவா ?

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் நிகழ்வுகளை தொடர்ந்து புறக்கணித்துவருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.  
தொடர்ந்து பொன்னியின் செல்வன் நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் விக்ரம் - காரணம் இதுவா ?

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் நிகழ்வுகளைத் தொடர்ந்து புறக்கணித்துவருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இயக்கிவருகிறார். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்வில் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் விக்ரம் பங்கேற்கவில்லை. தனியார் மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 

அடுத்த இரண்டு நாட்களிலேயே கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் முன் தோன்றி பேசினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொன்னி நதி பாடல் வெளியீட்டு விழாவிலும் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளவில்லை.

ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏறப்டுத்தியது. இதே நேரத்தில் இயக்குநர் கௌதம் மேனனை சந்தித்து துருவ நட்சத்திரம் படம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இயக்குநர் கௌதம் மேனன், விக்ரமுடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

பொன்னியின் செல்வன் நிகழ்வுகளை நடிகர் விக்ரம் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் வரும் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளனவாம். இதனால் நடிகர் விக்ரம் இயக்குநர் மணிரத்னத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளாராம். 

இதுதான் காரணமா? அல்லது வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றனவா என்பது விரைவில் தெரியவரும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com