12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

‘மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக... ’:புகைப்பட கலைஞர்களுடன் டாப்ஸி வாக்குவாதம்

நடிகை டாப்ஸி தனது அடுத்த படத்தின் புரமோஷன் விழாவிற்கு வந்தபோது நிழற்படக் கலைஞருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

Published On :

நடிகை டாப்ஸி தனது அடுத்த படத்தின் புரமோஷன் விழாவிற்கு வந்தபோது நிழற்படக் கலைஞருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

35 வயதான டாப்ஸி இந்தி சினிமாவில் சிறப்பாக நடித்து வருகிறார். தற்போது அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆகஸ்ட் 19 இப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாக உள்ளது. இயக்குநர் அனுராக் டாப்சி இணைந்து பணியாற்றும் 3வது திரைப்படம் இது என்பதும் லண்டன், பண்டாசியா சர்வ்தேச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பினையும் இப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்தப் படத்தின் புரமோஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு வந்த போது புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் தனிமுறை நிழற்படக் கலைஞர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். 2 மணி நேரம் காத்திருந்ததால் புகைப்படக் கலைஞர்கள் கோபமடைந்ததாக தெரிகிறது. 

விழாவிற்கு தாமதமாக வந்த டாப்ஸி புகைப்படக்காரர்களுக்கு புகைப்படம் எடுக்க நேரம் ஒதுக்காத்தால் இந்த வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டாப்ஸி பேசியதாவது: 

நான் என்னுடைய வேலையை செய்கிறேன். சொன்ன நேரத்திற்குதான் நான் எல்லா இடங்களுக்கும் செல்கிறேன். என்னிடம் மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன். 

எப்போதும் கேமிரா எங்களுக்கு முன்பு இருப்பதால் நாங்கள் பேசுவது மட்டும் தெரிகிறது. உங்கள் பக்கம் கேமிரா திரும்பி இருந்தால் தெரியும் உங்களது பேச்சு எப்படி இருக்கிறதென. நீங்கள் எப்போதும் சரி. நடிகர்கள் நாங்கள் எப்போதும் தவறு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.