ஆதி - அறிவழகன் கூட்டணியில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஈரம்’.
அதன்பின், அறிவழகன் - ஆதி கூட்டணி இணையாமல் இருந்தது.
இதையும் படிக்க: ’பிச்சைக்காரன் - 2’ படக்குழுவினர் கைது
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் ‘சப்தம்’ என்கிற படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தை ஆல்ஃபா ஃப்ரேம்ஸ், 7ஜி ஃபிமிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார்.