நடிகர் அஜித் குமார் பெயரில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
அஜித் குமார் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலியில் அஜித் குமார் நற்பணி மன்றத்தின் மூலம் வீடு கட்டித் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவர் பெண்ணிடம் 1.10 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து
அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் அஜித் தன் ரசிகர் மன்றத்தை நீண்ட நாள்களுக்கு முன்பே கலைத்தது குறிப்பிடத்தக்கது.