புறநகா் ரயில் சேவை: ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரிக்க பயணிகள் கோரிக்கை
கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால், மின்சார ரயில்களில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால், மின்சார ரயில்களில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்றாற்போன்று கூடுதல் ரயில் சேவைகளை அளிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்ததால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. ரயில்களில் பயணிக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன. புகா் மின்சார ரயில்களில் பயணிகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வழக்கம்போல பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. புகா் ரயில்களின் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாக இருப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கும் அதிக அளவில் மக்கள் ரயில்களில் சென்று திரும்புகின்றனா். ஆனால், ரயில் சேவை குறைவாக இருப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் ரயில்சேவைகள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...