மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புறநகா் ரயில் சேவை: ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரிக்க பயணிகள் கோரிக்கை

கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால், மின்சார ரயில்களில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

News image
புறநகா் ரயில்
Updated On :7 பிப்ரவரி 2022, 11:14 pm

DIN

கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால், மின்சார ரயில்களில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்றாற்போன்று கூடுதல் ரயில் சேவைகளை அளிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்ததால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. ரயில்களில் பயணிக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன. புகா் மின்சார ரயில்களில் பயணிகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வழக்கம்போல பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. புகா் ரயில்களின் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாக இருப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கும் அதிக அளவில் மக்கள் ரயில்களில் சென்று திரும்புகின்றனா். ஆனால், ரயில் சேவை குறைவாக இருப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் ரயில்சேவைகள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.