இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

பிரபல நடிகருடன் திருமணமா? என்ன சொல்கிறார் நித்யா மேனன் ?

பிரபல நடிகருடன் திருமணம் என வெளியான செய்தி குறித்து நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:21 pm IST


பிரபல நடிகருடன் திருமணம் என வெளியான செய்தி குறித்து நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். 

மலையாள நடிகர் ஒருவரை நடிகை நித்யா மேனன் விரைவில் காதல் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த இரு நாட்களாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் யார் அந்த நடிகர் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

இந்த நிலையில் தனக்கு திருமணம் என வெளியான தகவலை நடிகை நித்யா மேனன் முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய நித்யா மேனன், அந்தத் தகவலில் உண்மையில்லை. ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடும் முன் அதன் உண்மை தன்மை குறித்து தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Story image

நடிகை நித்யா மேனன் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 19(1)(ஏ) திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. நடிகர் இந்திரஜித்தும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்து.வி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

தமிழில் ஓகே கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யா மேனனுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடைசியாக தமிழில் மிஷ்கினின் சைக்கோ படத்தில் உதயநிதியுடன் நடித்திருந்தார். தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.