நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிரபல நடிகருடன் திருமணமா? என்ன சொல்கிறார் நித்யா மேனன் ?

பிரபல நடிகருடன் திருமணம் என வெளியான செய்தி குறித்து நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். 

News image
Updated On :21 ஜூலை 2022, 4:33 pm IST


பிரபல நடிகருடன் திருமணம் என வெளியான செய்தி குறித்து நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். 

மலையாள நடிகர் ஒருவரை நடிகை நித்யா மேனன் விரைவில் காதல் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த இரு நாட்களாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் யார் அந்த நடிகர் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

இந்த நிலையில் தனக்கு திருமணம் என வெளியான தகவலை நடிகை நித்யா மேனன் முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய நித்யா மேனன், அந்தத் தகவலில் உண்மையில்லை. ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடும் முன் அதன் உண்மை தன்மை குறித்து தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Story image

நடிகை நித்யா மேனன் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 19(1)(ஏ) திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. நடிகர் இந்திரஜித்தும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்து.வி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

தமிழில் ஓகே கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யா மேனனுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடைசியாக தமிழில் மிஷ்கினின் சைக்கோ படத்தில் உதயநிதியுடன் நடித்திருந்தார். தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.