பயணங்களின்போது கழிப்பறை இல்லாமல் மிகுந்த சங்கடங்களை அனுபவித்துள்ளதாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கழிப்பறை குறித்தும் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது.
சென்னை சாந்தோம் பள்ளியில் ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனைக் குறிப்பிட்டு சுட்டுரையில் விடியோ மூலம் தன்னுடைய கழிப்பறை அனுபவத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் பேசியதாவது, ''என் கழிப்பறை அனுபவத்தை உங்களுடன் பகிரப்போகிறேன். சிறு வயதிலிருந்தே பயணங்கள் மிகவும் பிடிக்கும். அம்மா அப்பாவுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளேன். பயணம் நல்ல அனுபவமாக இருந்தாலும், பயணத்தின்போது பலரும் சந்திக்கும் பிரச்னை கழிப்பறை.
நம்மில் பலர் பொதுக் கழிப்பறை பக்கம் கூட சென்றிருக்கமாட்டோம். யாரென்று தெரியாத பலருடைய வீடுகளுக்குச் சென்று தங்கள் கழிப்பறையை பயன்படுதிக்க நான் அனுமதி கேட்டு நின்றுள்ளேன்.
இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டறிய வேண்டும். அதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகின்றன. சென்னை சாந்தோமில் அடுத்த மாதம் 2ஆம் தேதி தொடங்குகிறது.
இதில், பொதுக் கழிப்பறையை எப்படி மீண்டும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம் என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. பலருடைய ஆலோசனைகளும் கேட்கப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
தங்களுடைய கழிப்பறை அனுபவக் கதையை #OnceinaLOO என்ற ஹேஷ்டேக் இட்டு தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர வேண்டும். இதனால் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு பலரிடம் சென்றடையும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
This is my toilet tale, whatâs yours? Share your toilet story and Join the International Toilet Festival Chennai on 2nd and 3rd April 2022 at Santhome Hr Secondary School, Mylapore to celebrate toilets through the toilet museum, an exciting brown box, toilet expo! #OnceinaLOO pic.twitter.com/SUtF2awyPM
â kiruthiga udhayanidh (@astrokiru) March 20, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று தங்கம் வாங்கலாமா? ஆக. 4 விலை நிலவரம்!

உதயநிதியின் இழிவான பேச்சு: தவெக அமைச்சர்கள் கடும் கண்டனம்!
நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!

வடிவேலு பட பாணியில் டிராமா! வலிப்பு வந்தது போல் நடித்துப் பணம் பறிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


