ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'அந்தகன்' படத்தின் 2வது பாடல்: வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் இரண்டாவது பாடல் மே 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

News image

அந்தகன் திரைப்பட போஸ்டர்

Updated On :24 மே 2022, 6:59 pm IST

பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் இரண்டாவது பாடல் மே 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதல் பாடல் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில், வரும் வியாழக்கிழமை இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. 

பிரஷாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துவரும் படம் அந்தகன். இந்தப் படம் ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெற்றிபெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் பிரஷாந்த்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீலா தாம்சன், மனோபாலா, பெசன்ட் ரவி, மோகன் வைத்தியா, லக்ஷ்மி பிரதீப், ரேகா சுரேஷ், செம்மலர், கவிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் தியாகராஜன். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் வரிகளில், உருவாகியுள்ள 'யோசிச்சி யோசிச்சி...' எனும் பாடல் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.