’யசோதா’ ஓடிடி வெளியீட்டுக்கு தடை

சமந்தாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘யசோதா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
’யசோதா’ ஓடிடி வெளியீட்டுக்கு தடை
Published on
Updated on
1 min read

சமந்தாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘யசோதா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது.

படம் நல்ல வரவேற்பினை பெற்றதால் உலகம் முழுவதும் இதுவரை ரூ.32 கோடிக்கும் அதிகமாக வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மருத்துவமனையின் பெயரில் ஒரு தனியார் மருத்துவமனை இயங்கிவந்துள்ளது. அதன் காரணமாக, மருத்துவமனை நிர்வாகம் தங்கள் மருத்துவமனைக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற டிச.19 ஆம் தேதி வரை யசோதா படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com