பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லியிருக்கும் நடிகர் விஷால்

வாராணசியில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை மேம்படுத்தியதற்காக, நடிகர் விஷால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லியிருக்கும் நடிகர் விஷால்
பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லியிருக்கும் நடிகர் விஷால்


சென்னை: வாராணசியில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை மேம்படுத்தியதற்காக, நடிகர் விஷால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தற்போது குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த ஆன்மிகப் பயணத்தில் அவர் காசிக்கும் சென்றுள்ளார். 

இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் தனது புகைப்படம் மற்றும் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கூறியிருப்பதாவது, அன்புக்குரிய மோடி அவர்களே, நான் காசிக்குச் சென்று வந்தேன். மிகச் சிறந்த தரிசனம் / பூஜை கிடைத்தது. மிகப் புனிதமான கங்கை ஆற்றையும் தொடும் பாக்கியம் கிடைத்தது.

காசி கோயிலை மேம்படுத்தியதற்காக உங்களுக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும். யார் ஒருவரும் காசி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கோயிலை புனரமைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பாராட்டுகள் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வாராணசியில் தேநீர் அருந்திக் கொண்டிருப்பது போலவும், காலை 9 மணிக்கு வாராணசி தெருவில் நடந்து செல்வது போன்றும் விடியோக்களையும் விஷால் பகிர்ந்திருந்தார்.

அவருடன், விஷாலின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான நந்தாவும் சென்றிருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com