நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நடிகர் தனுஷூக்கு 'பீர்' அபிஷேகம் செய்த ரசிகர்கள்...

’நானே வருவேன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் தனுஷ் பதாகைக்கு பீர் அபிஷேகம் செய்து பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளனர்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 12:27 pm

DIN

’நானே வருவேன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் தனுஷ் பதாகைக்கு பீர் அபிஷேகம் செய்து பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'நானே வருவேன்' இன்று வெளியானது.

இந்நிலையில்  படம் வெளியான அனைத்து திரையரங்களிலும் ரசிகர்கள் காலை முதல் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த தனுஷ் பேனருக்கு அவருடைய ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால், இணையத்தில் இச்சம்பவம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.