மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

'பா.ரஞ்சித் படத்துக்காக...' - விடியோ மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்

நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2022, 12:30 pm IST

நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். 

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. கடந்த மாதம் விக்ரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதீத காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. 

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது அவரது ரசிகர்களுக்கு கவலையை அளித்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்துகொண்டு ரசிகர்களிடம் உரையாடினார். 

இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் நடிகர் விக்ரம் இணைந்துள்ளார். நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியதாவது, ''நான் சீயான் விக்ரம். நானே தான். மாறுவேடத்தில் இல்லை. தற்போது ரஞ்சித் படத்துக்காக தயாராகிட்டு இருக்கேன். அதனால பயந்துடாதீங்க. 

ட்விட்டரில் இருந்தா நேரடியா ரசிகர்களிடம் பேசலாம், தகவல்களைத் தெரியப்படுத்தலாம். அப்படினு என்கிட்ட சொன்னாங்க. ஆனால் நான் கொஞ்சம் தாமதாமாக வந்திருக்கிறேன். 10, 15 ஆண்டுகள் தாமதம். 

இதெல்லாம் விட இந்த உலகத்துல அவ்ளோ அன்பு இருக்கு என எல்லோரும் பேசுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை நாமும் கொஞ்சம் அனுபவிக்கலாமே என ட்விட்டருக்கு வந்திருக்கிறேன் என்று அந்த விடியோவில் விக்ரம் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.