குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ரஜினிக்கு தனுஷ் சொன்ன ஒரு வரி பிறந்தநாள் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி நடிகர் தனுஷ் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 டிசம்பர் 2022, 1:01 pm IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி நடிகர் தனுஷ் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி தனது 72-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இன்று காலை முதலே ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்குகளில் புதுப்பொழிவுடன் பாபா மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலிருந்து முத்துவேல் பாண்டியன் என்ற பாடலும் இன்று மாலை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா’ என்று ஒரே வரியில் தனது வாழ்த்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனுஷ் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.