நடிகர் சந்தானம் மீண்டும் பேய் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதற்கு முன் வெளியான ‘சபாபதி’ படமும் சரியாக கைகொடுக்கவில்லை.
இதனால், அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான ‘தில்லுக்கு துட்டு’ படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்குகிறார்.
தற்போது, இப்படத்தின் டப்பிங் பணிகளில் சந்தானம் கலந்துகொண்டுள்ளார். விரைவில் படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் வெளியாக உள்ளது.