பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

விஜய் டிவி பிரபலம் கைது!

யூடியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published On :

யூடியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் நாஞ்சில் விஜயன். இவர் சீரியல்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் தொடர்பான சர்ச்சையில், சூர்யா தேவிக்கும், நாஞ்சில் விஜயனுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

இதில் நாஞ்சில் விஜயன் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக செயல்பட்டதால், நாஞ்சில் விஜயன் வீட்டுக்கு சூர்யா தேவி சென்றபோது, அவரை நாஞ்சில் விஜயன் தாக்கியதாக கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா தேவி  புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறையினர் நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். விசாரணைக்கு நாஞ்சில் விஜயன் ஆஜராகாமலும், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வளசரவாக்கம் காவல்துறையினர் நாஞ்சில் விஜயனை நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.