ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

'வெண்ணிலா கபடி குழு' பட நடிகர் மாயி சுந்தர் காலமானார்

'வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படத்தின் மூலம் பலரால் அறியப்பட்ட நடிகர் 'மாயி' சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 50.

News image

மாயி சுந்தர் (கோப்புப் படம்)

Updated On :24 டிசம்பர் 2022, 9:10 am IST

'வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படத்தின் மூலம் பலரால் அறியப்பட்ட நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 50.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் மாயி சுந்தர். அவர், சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோயால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாயி சுந்தர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாயி சுந்தர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறும் எனத் தெரிகிறது.

மாயி சுந்தர், வெண்ணிலா கபடி குழு படத்தைத் தொடர்ந்து, சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும், கட்டாகுஸ்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில்  நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.