அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

விஜய்யை பின்பற்றும் சிவகார்த்திகேயன் ? ரசிகர்கள் கருத்து மோதல்

நடிகர் விஜய்யை சிவகார்த்திகேயன் பின்பற்றுவதாக ரசிகர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 12:50 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு விடியோவில் ஜலபுலஜங்கு பாடல் காட்சி இடம்பெற்றிருந்தது. 

இந்த விடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் மாஸாக நடந்து வர அவரை கல்லூரி மாணவர்கள் வரவேற்பர். இது மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலை நினைவுபடுத்துவதாக விவாதங்கள் எழுந்துள்ளது. 

இதனையடுத்து நடிகர் விஜய்யின் ரசிகர்களும் சிவகார்த்தியேன் ரசிகர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம் ரஜினி ரசிகர்களும் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலே, பேட்ட பட மாஸ் மரணம் பாடலை நினைவுபடுத்துவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் மூன்று பாடல்களுக்கும் அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

டான் படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஆர்ஆர்ஆர் படமும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் டான் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். டான் படத்தை தெலுங்கிலும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆர்ஆர்ஆர் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் டான் படம் கவனம் பெறாமல் போக வாய்ப்பிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.