டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வலிமை திரைப்படக் காட்சிகளை நீக்கிய படக்குழு

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தில் 14 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

News image

வலிமை திரைப்படத்தில் 12 நிமிடக் காட்சிகள் நீக்கம்

Updated On :26 பிப்ரவரி 2022, 9:26 am IST

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தில் 14 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை. நீண்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய இந்தப் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி தமிழக அளவில் 1000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. தமிழகத்தில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் இத்திரைப்படம் பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு 12.50 நிமிடக் காட்சியை நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 55 நிமிடம் உள்ள இந்தத் திரைப்படத்தின் நாங்க வேற மாறி பாடல் காட்சியும் நீக்கப்பட உள்ளது. 

காட்சிகள் நீக்கப்பட்ட படமானது இன்றுமுதல் திரையிடப்பட உள்ளது. 

வலிமை திரைப்படத்துக்கு உலக அளவில் முதல் நாளில் ரூ.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், தமிழக அளவில் முதல் நாளில் 35 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.