நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்புத் தள புகைப்படம் வைரல்

கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இயக்குநர் சந்தான பாரதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :7 ஜனவரி 2022, 2:57 pm IST

கமல்ஹாசனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விக்ரம் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

முதலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன், இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தானபாரதி இந்தப் படத்தில் நடிக்கிறாரா இல்லை, நட்பு ரீதியிலான சந்திப்பா என்பது விரைவில் தெரியவரும். 

Story image

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.