மாநாடு வெற்றிக்கு பிறகு புதிய படத்தை அறிவிக்கும் வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தனது புதிய படத்தை அறிவிக்கவிருக்கிறார்.
மாநாடு வெற்றிக்கு பிறகு புதிய படத்தை அறிவிக்கும் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு - எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான இந்தப் படத்துக்கு பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படம் 50வது நாளை நிறைவு செய்தது.

இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது புதிய படத்தின் அறிவிப்பு நாளை(சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மாநாடு படம் வெளிவருவதற்கு முன்னதாகவே அசோக் செல்வன் நடிப்பில் ஒரு காதல் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். 

இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அறிவிப்பு தான் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com