இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

இனி 24 மணி நேரமும் பிக்பாஸ்: பிக்பாஸ் அல்டிமேட் குறித்து சுவாரசிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி இனி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:39 pm IST

பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ராஜு அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றினார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிக்பாஸ் போலவே பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது.

பிக்பாஸ் போல் அல்லாமல் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும்.  பிக் பாஸ் வீட்டில் நாள் முழுவதும் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் காண முடியும். இந்த  நிகழ்ச்சியிலும் தாம்  பங்கேற்கவிருப்பதாக, இதுவரையிலான பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்திய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரையிலான பிக்பாஸ் சீசன்களில்   கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும். முதல்கட்டமாக பிக்பாஸில் ஏற்கெனவே பங்கேற்ற வனிதா, அனிதா சம்பத், ஜுலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று  கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.