பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிய உச்சம்: 46 ஆயிரம் பேருக்கு கரோனா; டிபிஆர் 40%
இந்நிலையில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் தனது சுட்டுரைத் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டுத் தனிமையில் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க | உ.பி. தேர்தல்: கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி?
“இந்த பேரிடர் இன்னும் முடியவில்லை. நாம் கவனமுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்” எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழில் வாயை மூடிப் பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.